சென்ற ஜனவரி 6ம் தேதியன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை யகத்தில் தமுமுகவின் ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவர் சகோ. ஹுஸைன் பாஷா, நடத்திய ''உணர்வாய் உன்னை'' என்கிற தலைப்பில் ஆளுமைத் திறன் மேம் பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் வடசென்னை, தென்சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் 13க்கும் மேற்பட்ட தலைப்புகளில் வகுப்பு நடைபெற்றது. நேரத் தவறாமை குறித்தும், ஆளுமைத் திறன் மேம்பாடு குறித்தும் விளக்க வகுப்புகள், பயிற்சி உபகரணங்கள் உதவியுடன் புரியும்படியாக எளிய முறையில் நடைபெற்றன.
மனிதர்கள் தங்கள் கடந்த கால மதிப்பீடுகளின் அடிப்படையில், நிகழ்காலத்தில் முடிவு எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும், நிம்மதியின்மையும் வெகு அழகாக, உதாரணங்களுடன் பயிற்சியாளர் விவரித்துக் கூறினார். மேலும் குர்ஆனின் வசனங்களையும், ஆதம் நபியின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் எடுத்துக்கூறி, தீமைகளைத் தவிர்த்து, நன்மையின் பக்கம் மக்கள் நடைபோட அழகிய முறையில் நடத்தப்பட்ட இப்பயிற்சி, உள்ளத்தின் ஆழத்தில் அழகாகப் பதிந்தது என்றால் மிகையல்ல. இந்நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைந்ததால், வட சென்னை, தென்சென்னை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் சகோதரர் ஹுசைன் பாஷா இந்நிகழ்ச்சியை நடத்தினார். (Courtesy : Makkal Urimai)
No comments:
Post a Comment