நெல்லை ஏர்வாடி முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பாக உணர்வாய் உன்னை

நெல்லை ஏர்வாடி முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பாக உணர்வாய் உன்னை நிகழ்ச்சி துபை தேராவில் கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தில் 9.2.2007 அன்று நடைபெற்றது. ஏறத்தாழ 50 சகோதரர்கள் இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.காலை 9.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு நிறைவு பெற்றது. சகோதரர். ஜலாலுதீன் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார்கள். சகோதரர். அல்தாப் மீரான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.
இஸ்லாமிய பார்வையில் ஆளுமைத்திறன் மேம்பாடு தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நம்மிடையே உள்ள தீய குணங்களை எவ்வாறு அகற்றுவது, இறை அச்சத்தை இதயத்தில் எவ்வாறு தேக்குவது, கவலைகளை களைந்து நிம்மதியான வாழ்க்கைக்கு என்ன வழி போன்ற ஈருலக வெற்றியை மையமாகக் கொண்டு சகோ.ஜலாலுதீன் அவர்கள் பல விசயங்களை எளிமையான முறையில் தெளிவுபடுத்தினார்கள்.
கலந்து கொண்ட அனைவரும் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது எனவும் இந்த நிகழ்ச்சி அமீரகத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். இவ்வாறான நிகழ்ச்சிகள் காலத்தின் கட்டாயம் கருதி முனைப்புடன் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து நடைபெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


அல்லாஹ் அருள் புரிவானாக!

No comments:

Post a Comment